என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜோஸ் ஆலுக்காசில் கொள்ளையடித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    வேலூர் ஜோஸ் ஆலுக்காசில் கொள்ளையடித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப் பாளையம் காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த மாதம் சுவரில் துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த வழக்கில் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்கா ராமன் (வயது 23). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது.

    கைதான டீக்கா ராமன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். 

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் ஜெயிலில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்து கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் ஜாபர்கான் (26) மேல் விஷாரத்தை சேர்ந்த அப்சல் பாஷா (29) ஆகியோர் தொடர்ந்து குட்கா கடத்தியதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல குடியாத்தம் தரணாம்பேட்டையை சேர்ந்த சங்கர்லால் (24) என்பவரும் குட்கா கடத்தலில் ஈடுபட்டதாக குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×