என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரியில் திறக்கப்பட்ட சுரங்கப்பாதை.
வேலூரில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை திறப்பு
வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை இன்று திறக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கை யம்மன் கோவில் பகுதியில் இருந்து எதிரே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக சாலைக்கு செல்லும் பொதுமக்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
இதை தவிர்க்க சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சத்துவாச்சாரி பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடந்தது.
கதிர் ஆனந்த் எம்.பி.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கமிஷனர் அசோக்குமார், 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், டாக்டர் வி.எஸ்.விஜய், வள்ளலார் ஆர். பி.ரமேஷ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story






