என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.
ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
குடியாத்தத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் உள்ளன இந்த ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தி ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் விதிமுறைகள் குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசனை மற்றும் கூட்டங்கள் நடத்துமாறு வேலூர் சரக போலீஸ் துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே பயணிகளிடம் வாங்கவேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
சந்தேகப்படும்படியான பொருட்களை கொண்டு சென்றாலோ, சந்தேகப்படும்படியான மர்ம நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிப்பது.
மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் பயணிகளும் முகக்கவசம் அணிய வலியுறுத்தவேண்டும் சமூக இடைவெளி பின்பற்றி நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் நன்றி கூறினார்.
Next Story






