search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்
    X
    புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்

    புதுக்கோட்டையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    புதுக்கோட்டையில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 73&வது குடியரசு தினவிழா ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்றது.   விழாவில் கலெக்டர் கவிதா  ராமு தேசியக்கொடியை  ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுடன் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றிய  காவல் துறையினர், அரசு அதிகாரிகள்  மற்றும் முன்கள பணியாளர்கள் 525 பேருக்கு முதல்&அமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாநிலங்களவை  எம்.பி. அப் துல்லா,   கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை யூனியன் சேர்மன் சின்னையா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×