என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி சஸ்பெண்டு
Byமாலை மலர்25 Jan 2022 9:42 AM GMT (Updated: 25 Jan 2022 9:42 AM GMT)
புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து கலெக்டர் இன்று உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவண காப்பக அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவறை உதவியாளராக நாகம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகம்மாள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவண காப்பகங்களை வெளியில் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.
அதேபோல் அவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் தீவிர விசாரணை நடத்தினார். அதில் நாகம்மாள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை ஆவண காப்பக பதிவறை உதவியாளர் நாகம்மாளை சஸ்பெண்டு செய்து கலெக்டர்கவிதா ராமு இன்று உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X