என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதனூர் பாலாற்றில் காவிரி குடிநீர் பைப்லைன் சரி செய்யப்பட்டு வரும் காட்சி.
    X
    மாதனூர் பாலாற்றில் காவிரி குடிநீர் பைப்லைன் சரி செய்யப்பட்டு வரும் காட்சி.

    வேலூரில் ஒருவாரத்திற்குள் காவிரி குடிநீர் வினியோகம்

    பச்சகுப்பம் பாலாற்றில் சீரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வேலூரில் ஒருவாரத்திற்குள் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் பதிக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. இதனால் ஆம்பூரிலிருந்து வேலூருக்கு கூட்டுக் குடிநீர் விநியோகம் தடைபட்டது. 

    சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது.

    மாதனூர் பாலாற்றில் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டு, இந்தப் பணி மேற்கொள்ளபட் டது. மாதனூரில் சுமார் 580 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த குழாய்கள் சுமார் 50 நாள்களில் 5 பொக்லைன், அதிக சக்தி கொண்ட வெல்டிங் எந்திரங்கள், கிரேன் ஆகியவற்றை பயன்படுத்தி முழுவதுமாக சீரமைத்தனர்.

    இதனை தொடர்ந்து பச்சகுப்பம் பாலாற்றில் குழாய்கள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது.ஆற்றில் அதிக வெள்ளம் செல்வதால் தண்ணீரை திசை திருப்பி குழாய்களை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

    பச்சகுப்பம் பாலாற்றில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து விட்டால் அங்கிருந்து குடியாத்தம் பகுதிக்கு காவிரி குடிநீர் எளிதில் சேர்ந்துவிடும்.

    இந்தப் பணிகள் முடிவடைந்ததும் பொய்கை பகுதி பாலாற்றில் குழாய் களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அதற்குப்பிறகுதான் காவிரி குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இன்னும் ஒரு வாரத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×