என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடியரசு தின விழாவையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு
Byமாலை மலர்25 Jan 2022 9:28 AM GMT
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி:
இந்திய திருநாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு விழா நடக்கிறது.
விழாவில் கலெக்டர் சிவராசு தேசியக்கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் சங்கங்கள் சார்பில் குடி யரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகரில் 1,500 போலீசாரும், புறநகர் மாவட்டத்தில் 1,000 போலீசாரும் என மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
மாநகர், புறநகரில் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஆகியவற்றில் தங்கியுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டனர். தங்க வருபவர்களிடம் முறையாக அடையாளம் அட்டை வாங்கி சரிபார்த்த பிறகே அறை கொடுக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம்,கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கும், மத்திய அரசு அலுவலகங்க ளுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன், திருச்சி மாநகர போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். கார் பார்க்கிங் பகுதியில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி ரெயில்வே ஜங்சன், காவேரி, கொள்ளிடம் பாலங்கள், ரெயில் நிலையங்களுக்கும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் வரை இந்த தீவிர சோதனை நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X