என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான வாலிபர் உடலையும், விபத்து ஏற்படுத்திய காரையும் படத்தில் காணலாம்.
பைக் மீது கார் மோதி தொழிலாளி சாவு
நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பரிதபாமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 23) இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஏரியூரில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மல்லப்பள்ளி புதுப்பேட்டை சாலையில் அம்சியம்மன் கோயில் அருகில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிரபு தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






