என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அண்ணனை கல்லால் தாக்கி கொன்ற விவசாயி
Byமாலை மலர்25 Jan 2022 9:24 AM GMT (Updated: 25 Jan 2022 9:24 AM GMT)
போளூர் அருகே நிலத்தகராறில் அண்ணனை கல்லால் தாக்கி கொன்ற விவசாயி யும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
போளூர்:
போளூர் அடுத்த பொத்தரை குசால் பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 60). இவரது தம்பி கோவிந்தசாமி இருவரும் விவசாயிகள்.
நிலத்தில் பங்கு பிரித்து கொடுத்ததில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கோவிந்தசாமியும் இவரது மனைவி மீனாவும் நாராயணன் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டில் இருந்த நாராயணனிடம் நிலம் சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் நாராயணனை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
ஆத்திரமடைந்த கோவிந்தசாமி கல்லால் நாராயணனை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு நாராயணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாராயணனை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை போளூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக கோவிந்தசாமி, மீனாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X