என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குடியரசு தினத்தையொட்டி 2,250 போலீசார் பாதுகாப்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 2,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.
வேலூர்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சத்தால் நாளை குடியரசு தின விழாவை பாதுகாப்பான நடைமுறைகளுடன் கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் விழாக்களில் கலெக்டர்கள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி எளிமையான முறையில் கொண்டாட உள்ளனர்.
மேலும், குடியரசு தினத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னேற் பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை இணைக் கும் பொன்னை, கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சோதனை சாவடிகளில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.
மாவட்டத்தின் முக்கிய நகர சந்திப்புகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளவும், லாட்ஜ் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்யப் படுகிறது.
பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு முதல் 27-ந் தேதி அதிகாலை 4 மணி வரை தீவிர சோதனை நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆந்திர, கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story






