என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மருத்துவ படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு அரசுப் பள்ளி மாணவர்களில் அறந்தாங்கி மாணவர் முதலிடம்
Byமாலை மலர்25 Jan 2022 7:05 AM GMT (Updated: 25 Jan 2022 7:05 AM GMT)
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாவர்களில், புதுக்கோட்டை மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர்அய்யப்பன் மகன் சிவா (வயது 20). இவர் சிலட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 முதல் 12&ம் வகுப்பு வரை படித்தார்.
இந்த நிலையில் கடந்த 2021&ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு, தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மாணவர் சிவா கூறுகையில், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முதலில் புரிந்து படித்தாலே அனைவரும் சாதிக்கலாம். சாதிப்பதற்கு மொழி தடை இல்லை. தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும் மனப்பாடம் செய்யா மல் புரிந்து படிக்க வேண்டும் என்றார்.
மேலும் பாடம் அடிப்படையில் வினாக்களை நன்கு புரிந்து படித்து அதற்கேற்ற விடையை தேர்வு செய்ய வேண்டும். அவரவருக்கு ஏற்றார் போல் நேரம் ஒதுக்கி, ஒரு நாளைக்கு குறைந்தது 50 கேள்விகளுக்காவது படிக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X