என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மர்ம விலங்கு கடித்ததில் பலியான ஆடுகளை படத்தில் காணலாம். மர்ம விலங்கு கடித்ததில் பலியான ஆடுகளை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241447237502_Tamil_News_Tiruvannamalai-News-Mysterious-animal-that-bit-13-sheep_SECVPF.gif)
X
மர்ம விலங்கு கடித்ததில் பலியான ஆடுகளை படத்தில் காணலாம்.
13 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு
By
மாலை மலர்24 Jan 2022 9:17 AM GMT (Updated: 24 Jan 2022 9:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவண்ணாமலை அருகே 13 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாயநிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிடடு மாலையில் பட்டியில் அடைத்து சென்றார். நேற்று காலை முத்துராமன் ஆட்டுப் பட்டிக்கு சென்றபோது அங்கு கட்டப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
அவைகளின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தன. எனவே ஓநாய் போன்ற வனவிலங்குகள் ஆடுகளை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி முத்துராமன் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பலியான ஆடுகளை ஆவூர் கால்நடை மருத்துவர் கவிதா பரிசோதனை செய்தார். இதைத்தொடர்ந்து பலியான ஆடுகள் புதைக்கப்பட்டன.
ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது? என்பது மர்மமாக உள்ளதால் இதுதொடர்பாக சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
எனவே ஆடுகளை கொல்லும் விலங்குகளை கண்டறிந்து அவைகள் மீண்டும் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)