search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்- வாலிபர் பலி

    கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் குண்டு சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 23). இவர் கடந்த 21-ம் தேதி செங்கல்பட்டு மேலமையூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனது நண்பர் மதி (23), என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

    கூடுவாஞ்சேரி அருகே செல்லும் போது பின்னால் பதிவு எண் தெரியாத ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது (வயது 60), இவர் கடந்த 17-ந் தேதி ஊரப்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் நயினா முகமது மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் நயினா முகமது இறந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×