என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம் ஈடுபட்ட காட்சி. காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம் ஈடுபட்ட காட்சி.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241421123268_Tamil_News_Tiruvannamalai-News-Struggle-to-get-permission-for-the_SECVPF.gif)
X
காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம் ஈடுபட்ட காட்சி.
காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம்
By
மாலை மலர்24 Jan 2022 8:51 AM GMT (Updated: 24 Jan 2022 8:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா முன்னிட்டு காளை விடும் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் நாளிலேயே ஊரடங்கு உத்தரவு காரணமாக காளைவிடும் திருவிழா நடத்த முடியவில்லை.
கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் காளைவிடும் திருவிழா நேற்று 21&ந்தேதி நடத்த அனுமதி கோரி ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா, டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் 21-ந்தேதி காலை காளைவிடும் நடத்த அனுமதி வேண்டும் என அவ்வூரில் உள்ள மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)