search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயமடைந்தார்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கூனிச் சம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது25). இவர் துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கி ளுக்கு பெட்ரோல் நிரப்ப திருக்கனூர்- திருவண்ணாமலை ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்குக்கு சென்றார். அப்போது அந்த வழியாக செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொருவர் ரமேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத் தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ரமேசை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்-மடுகரை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரங்க ராஜன் (வயது21). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    22&ந் தேதி காலை ரங்கராஜன் வேலைக்கு செல்ல மோட்டார் சைக்கி ளில் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். புதுவை&கடலூர் மெயின் ரோட்டில் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் கம்பெனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ரங்கராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த ரங்கராஜன் வலது கை மற்றும் இடது காலில் காயமடைந்தார். அவர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கிரும்பாக்கம் போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×