என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

    அத்தியாவசிய கடைகள், பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த 9 ந்தேதி மற்றும் 16ந் தேதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு கடையடைப்பு நடைபெற்றது. அதேபோல் இன்று மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள், பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை தணிக்கை செய்தனர். தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×