search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய பஸ் நிலையம்.
    X
    திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய பஸ் நிலையம்.

    முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

    திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடிய காணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    முழு ஊரடங்கு இன்று அமுலில் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள பல திருமண மண்டபங்களில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று பல புதுமண ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் கொரோனா பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா மூன்றாவது பரவல் அதிகரித்துள்ளது.

    எனவே விரைவில்  திருமண மண்டபங்களில் திருமணம் செய்ய தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகள் திருமணத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னதாகவே திருமணத்தை நடத்தி வருகின்றனர். 

    திருவண்ணாமலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 

    கொரோனா விதிமுறைகள் காரணமாக ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்றன. உறவினர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.
     
    திருவண்ணாமலையில் கடந்த வாரத்தை விட இன்று மக்கள் நடமாட்டம் ஓரளவு காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று மாலையே வாங்கினர். 

    இந்த முழு ஊரடங்கு அனைத்து தரப்பினரையும் மனதளவில் பாதிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். 

    இருந்தபோதிலும் உடல் நலன் கருதி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர்.
    Next Story
    ×