search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    பூத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    திருவண்ணாமலையில் பூத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

     அன்று முதல் கால பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று (22-ந் தேதி)  காலை இரண்டாம் கால பூஜையும் .மாலை 4மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. 

    இதைத் தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

     8 .15 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனை, 8.30 மணிக்கு கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பின்னர் 8.45 மணிக்கு விமானம் மற்றும் மூலவர்  ,பரிவார மூர்த்திகள்  விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    அப்போது அங்கு திரண்ட 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இன்று முழு ஊரடங்கு நாள் என்பதால் கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் பக்தர்களை வெளியேறச் சொல்லி வற்புறுத்தினார். 

    இதனால் 1மணிநேரத்தில்  பக்தர்கள் அனைவரும் வெளியேறினர். 
    கும்பாபிஷேக விழாவில் உபயதாரர்கள் தமிழ்ச்செல்வி, அருள்குமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜீவானந்தம், அருணாச்சலேஸ்வரர் கோவில் கோவில் இளவரசு படம் ரமேஷ் குருக்கள், சர்வசாதகம் எம்.எஸ். செல்லப்பா பட்டாச்சாரியா, சபரிகிரீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×