search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இன்று 251 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இன்று 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     இதுவரை 55,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,281 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,152 பேர் பலியானார்கள். தற்போது 1,963 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 235  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

    தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×