search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கரண்.
    X
    கைதான கரண்.

    365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது

    பளுகல் அருகே கடையில் 365 கிலோ இரும்பு கம்பி திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    பளுகல் அருகே மணிவிளை பகுதியில் கம்பிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கரண் (வயது40) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத் தன்று காலை கடை மேலா ளர் வழக்கம் போல் கம்பிகள்   சரியாக இருக் கிறதா என்று சோதனை செய்தார் அப்போது 365 கிலோ கம்பி மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து மேலாளர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது கரண்தூண்டுதலின் பேரில்   சில ஊழியர்களும் சேர்த்து கம்பியை நூதன முறையில் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நிறுவன மேலாளர் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் கரணை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் ஊழியர்களான பளுகல் மத்தம் பாலையை சேர்ந்த அஜி(40) திருச்செந்தூரை சேர்ந்த யாசர் அராபத் (33) மார்த்தாண்டம் கஞ்சிரோட்டை சேர்ந்த செல்வின்(32) நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ராஜா (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×