search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கரூர் அருகே தேள் கடித்து சிறுவன் பலி

    கரூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தேள் கடித்து பலியானார்.
    கரூர்: 

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் லட்சுமணம் பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகன் பாலமுருகன் வயது 7. கருப்புசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

    புஷ்பவள்ளி தனது மகன் பாலமுருகனுடன் வசித்து வந்தார். சம்பவதன்று பாலமுருகன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தேள் கடித்துள்ளது. 

    இதை தொடர்ந்து பாலமுருகனை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×