என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனிபொழிவு
Byமாலை மலர்23 Jan 2022 7:03 AM GMT (Updated: 23 Jan 2022 7:03 AM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் குளிரும், பனியும் நிலவி வருகிறது. நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவியதோடு, இன்று காலை சூரியன் உதித்தும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
மேலும் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் காலையில் 8.30 மணி வரை தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். சிலர் ஸ்வட்டர், குல்லா அணிந்து குளிரில் நடுங்கியபடி சென்றனர்.
பெரம்பலூர் நகரில் இன்று காலை 8.30 மணி வரை பனிமூட்டம் விலகவில்லை. நகர் முழுவதும் வெள்ளைத்திரை போர்த்தியது போல் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகவும் குறைந்த வேகத்தில் சென்று வந்தன.
பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நகரில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தாக்கத்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X