என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊதியம் வழங்காததால் அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை
Byமாலை மலர்23 Jan 2022 6:51 AM GMT (Updated: 23 Jan 2022 6:51 AM GMT)
அறந்தாங்கி அருகே ஊதியம் வழங்காத ஆத்திரத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியை சூறையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மை. இவர் மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிகாரிகளுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என்ற பல்வேறு காரணங்களால், வட்டாரக்கல்வி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தைலம்மை, மணமேல்குடியிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்துள்ளார். மேலும் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாது அங்குள்ள யாரும் வேலை செய்யக்கூடாது என அலு வலர்களை மிரட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆசிரியர் தைலம்மையின் இந்த நடவடிக்கை குறித்து, வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தைலம்மை ஏற்கனவே பள்ளிக்கு வராமல் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X