என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகளுக்கு கொரோனா தொற்று இல்லை- பூங்கா நிர்வாகம் தகவல்
Byமாலை மலர்23 Jan 2022 3:13 AM GMT (Updated: 23 Jan 2022 3:13 AM GMT)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவைகளுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள், 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட முடிவுகளின்படி பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள், 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட முடிவுகளின்படி பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X