என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    அரகண்டநல்லூர் விற்பனை கூட பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் போராட்டம்- நெல் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

    அரகண்டநல்லூர் விற்பனை கூட பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று நெல் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் நெல் வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் தொழில் அதிபர் ஜெ.முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 100 கோடிக்கு கொள்முதல் நடைபெறும் அரகண்டநல்லூர் விற்பனை கூடத்திற்கு இதுவரை நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாமல் இருப்பது பெரிய அளவிலான நிர்வாக சிக்கலை ஏற்படுத்துகிறது.

    விற்பனை கூடத்திற்கு தேவையான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் இருப்பது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே பணப் பட்டுவாடா செய்வதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது.

    தானியக் கிடங்கில் பழுதடைந்துள்ள ரோலிங் ‌ஷட்டர்ரை உடனே பழுது நீக்கம் செய்து தரவேண்டும்.விற்பனைக்கூடம் முழுமைக்கும் மழைநீர் வடிகால் வாய்க்கால் செய்து தரவேண்டும் விற்பனைக் கூடத்தில் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தி தரவேண்டும்.

    விற்பனைக் கூடத்தின் அனைத்துப் பகுதிக்கும் மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி பொருத்தி அதனை முறையாக செயல்படுத்த வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    இறுதியாக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 24-ந்தேதி முதல் விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்வதில்லை எனவும் விவசாயிகள் கொண்டுவரும் தானியங்களை கொள்முதல் செய்ய போவதில்லை எனவும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் தொழிலதிபர் ஜெ.முருகன் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×