என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 

    பொது மக்கள் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் கொரோனா கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் 04175-233344, 233345, 232377 என்ற எண்களை தொடர்பு கொண்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகள், உதவிகளை பெற்று பயன்பெறலாம். 

    குறிப்பாக வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொலைபேசி 
    வாயிலாக டாக்டரின் ஆலோசனைகளை நேரடியாக பெற்று கொரோனா தொடர்பான பயங்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 
    Next Story
    ×