search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி
    X
    பழனி

    தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை

    கெலமங்கலம் அருகே வாலிப˜ தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன். விவசாயி. இவரது மகன் பழனி (வயது 26). இவர் டைல்ஸ் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிய¤ல் உள்ள அரசு பள்ளியின் பின்புறம் உள்ள சுடுகாட்டில் பழனி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கெல மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, ராயக்கோட்டை இன்ஸ் பெக்டர் சுப்பிர மணி, கெலமங்கலம் சப்& இன்ஸ் பெக்டர்கள் கார்த்தி கேயன், பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்த னர்.
    போலீசாரின் விசார ணையில் பழன¤யை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது.  பின்னர் கொலையுண்ட பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மது குடிக்கும் தகராறில் பழனி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான முனிராஜ் மகன் சாமி (19), மாதேஸ் மகன் விஜய்(23) ஆகியோருடன் பழனி மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமி, விஜய் ஆகியோர் பழனியை சரமாரியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது. 

    இதையடுத்து பழனியை கொலை செய்த வாலிபர்கள் சாமி, விஜய் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் , கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×