என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய தமிழர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தேசிய தமிழர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தேசிய தமிழர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தமிழர் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் ஹாஜி முகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கணேசன் மனித உரிமைக் கட்சி
நிறுவன தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கும், இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்வதற்கும் லஞ்சம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடையை சீர் செய்து பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






