என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் எஸ்.பி.க்கு கொரோனா
வேலூரில் இன்று எஸ்.பி. உள்பட 277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,750 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,151 பேர் பலியானார்கள். தற்போது 2,123 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 277 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக 447 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 278 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






