search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை கலெக்டர் சிவராசு நேரில் ப
    X
    முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை கலெக்டர் சிவராசு நேரில் ப

    முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

    முக்கொம்பு முதல் வண்ணத்துப் பூச்சி பூங்காவரை நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருச்சி :

    திருச்சி  மாவட்டம்,  முக்கொம்பு   மேலணையில் கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை கலெக்டர் சு.சிவராசு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இப்பணியில் இதுவரை தெற்கு  மற்றும்   வடக்கு கொள்ளிட    கதவனையில் அஸ்திவார பணிகள், தூண்களை உயர்த்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள், நீர் வழிந்தோடும் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. வடக்கு கொள்ளிடம் கதவணையில், தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகள், முன்புறம் சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், முக்கொம்பு முதல்  வண்ணத்துப்பூச்சி பூங்கா  வரையிலான கரையைபலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள், கலிங்கு பாலம் (ஊசி பாலம்) அமைக்கும் பணிகள் மற்றும் காவிரி  பாலத்துடன்  புதிய கதவணையை இணைக்கும் அணுகு சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     
    பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

    கொள்ளிடம்  ஆற்றில் அதிக நீர்பெருக்கின் காரணமாக கதவணையில் இருந்த 9 மதகுகள் கடந்த 22.08.2018 அன்று    தொடர்ச்சியாக விழுந்து சேதமடைந்ததைத் தொடர்ந்து, புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.387.60 கோடி மதிப்பீட்டிற்கு  அரசாணை வழங்கப்பட்டு, இப்பணிக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு 06.03.2019 அன்று பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய கதவணைக்கு  75  மீ.  கீழ்புறம் தெற்கு கொள்ளிடத்தில் 628  மீட்டர்  நீளத்திற்கு  45 மதகுகள்  மற்றும்  வடக்கு கொள்ளிடத்தில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 மதகுகள் என ஆக மொத்தம் 766 மீட்டர் நீளத்திற்கு   55   மதகுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

    இக்கதவணையில் போக்கு வரத்திற்கு ஒரு வழி சாலை வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் துரிதமாக நடைபெற்று தற்சமயம் 92 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில்  இதரப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
      
    இந்த பணியில், மொத்தமுள்ள 484 பைல்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ன 1,688 மீட்டர் நீளமுள கசிவில்லா சுவர் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,532 மீட்டர் நீளமுள்ள  குறுக்கு  வெட்டு சுவரில் 1,467 மீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன.  அணையின் மேல் மற்றும் கீழ்புறத்தில் தேவையான 7,800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் 7,320 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 
     
    மொத்தமுள்ள 55 மதகுகளில் அடித்தளம் அமைக்கும் பணிகளில் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 766 (628&138) மீட்டர் நீளம் கொண்ட ஒரு வழிப்பாலத்தில் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளன. 55 மதகுகளின் மூடு பலகைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்டது.  இதில் 53 மூடு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. 
     
    முக்கொம்பு  முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை உள்ள நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் இதர பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணிகள்  அனைத்தும் மே 2022&க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×