என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிரிவலப் பாதையில் குரங்குகள் அட்டகாசம்
Byமாலை மலர்21 Jan 2022 9:17 AM GMT (Updated: 21 Jan 2022 9:17 AM GMT)
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கேமரா-மின் கம்பங்களில் ஏறி குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 14 கி.மீ.தூரம் அண்ணாமலையை சுற்றி வந்து கிரிவல பாதை வழிபாடு செய்வார்கள்.
பவுர்ணமி நாட்கள் மட்டும் இன்றி சாதாரண நாட்களிலும் பக்தர்கள் 24 மணி நேரமும் கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்விளக்கு, கண்காணிப்பு காமிரா மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கிரிவலப்பாதையில் வசித்துவரும் ஏராளமான குரங்குகள் மின் கம்பங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா கம்பங்களில் ஏறி விளையாடுகின்றன. மேலும் வயர்களிலும் நடந்து செல்கின்றன. இதன் காரணமாக இணைப்புகள் சீர்குலைந்து அடிக்கடி மின் விளக்குகள் எரியாமல் பக்தர்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் கண்காணிப்பு காமிரா செயல்படாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதால் அங்கு நடைபெறும் குற்றங்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
இது பற்றிய தகவலை கலெக்டர் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் கலெக்டர் கிரிவலப்பாதையில் மின்விளக்கு இணைப்புகள் மற்றும் கண்காணிப்பு காமிரா இணைப்புகள் பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த பணி நடைபெறாமல் இருப்பதால் தொடர்ந்து இதுபோன்ற நிலைமை ஏற்படுகிறது.
மேலும் கிரிவலப்பாதையில் அறிவிப்புகளை ஒலி பரப்பும் இணைப்புகளும் குரங்குகளால் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் எந்த அறிவிப்புகளையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிரிவலப் பாதையில் விபத்துகளில் குரங்குகள் இறப்பதால்பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவு எதுவும் வைக்க வேண்டாம் என்று வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிரிவலப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அங்குள்ள புறக்காவல் போலீஸ்நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி விரைவில் மின் கம்பங்கள் மற்றும் கண்காணிப்பு காமிரா இணைப்புகளை பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X