என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கடலில் குதித்து காண்டிராக்டர் தற்கொலை
புதுவையில் கடலில் குதித்து காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை முத்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பஸ்கல் (வயது 45). இவர் வீடு கட்டி கொடுக்கும் காண்டிராக்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஞானமேரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக வீடு கட்டிக் கொடுக்கும் பிரச்சினையில் கிறிஸ்டியன் பஸ்கல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கிறிஸ்டியன் பஸ்கல் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
கடற்கரை சாலைக்கு சென்ற கிறிஸ்டியன் பஸ்கல் சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் திடீரென கடலில் குதித்தார். சற்று நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டியன் பஸ்கல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஞானமேரி கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கிறிஸ்டியன் பஸ்கல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






