என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குற்றவாளிகள் 2 பேர் நீதிபதி முன்னிலையில் சரண்
Byமாலை மலர்20 Jan 2022 11:07 AM GMT (Updated: 20 Jan 2022 11:07 AM GMT)
ஓசூரில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கோணிக்கரையை சேர்ந்த பாபு (33) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தியாகு (44) ஆகிய 2 பேருக்கும் கடந்த 2019- ஆம் ஆண்டு ஓசூர் சப் கோர்ட்டில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதிலும், கடந்த 27-07-&2021 அன்று மேற்கண்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறை வாகிவிட்டனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் பாபு மற்றும் தியாகு ஆகிய இருவரும் நேற்று ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் சரணடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X