என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பட்டதாரி மாணவி கடத்தல்
போச்சம்பள்ளி அருகே பட்டதாரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை அடுத்துள்ள் காரகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் பவித்ரா (வயது19). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.காம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனிஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.
நேற்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பவித்ராவை விக்னேஷ் கடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் சகோதரர் பார்தீபன் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி விசாரித்து வருகின்றார்.
Next Story






