search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
    X
    பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

    பால் குளிரூட்டும் மையம் திறப்பு

    ஆற்காடு அடுத்த திமிரியில் பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் திமிரி - பரதராமி ஊராட்சியில் பால்வளத்துறை (ஆவின்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பு மையத்தினை  அமைச்சரகாந்தி பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து குளிர்விப்பு எந்திரத்தினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர்பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 279 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

    நாளொன்றுக்கு சராசரியாக 1,15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம், வேலூர் பால் பண்ணை மற்றும் 26 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் கையாளப்பட்டு குளிரூட்டப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கி 68 சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு 33,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் 5 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குளிரூட்டப்படுகிறது. 

    புதிய பால் குளிர்விப்பு மையம்  மூலம் முகமது பேட்டை, மோகனாவரம், நம்பரை, ஆணைமல்லூர், விளாப்பாக்கம், விளாரி, டி.கே.மாங்காடு, சர்வதாங்கள் ,  புண்ணப்பாடி, லாடாவரம் ஆகிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து நாளொன்றுக்கு 2500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு குளிரூட்டப்பட உள்ளது. 

    நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ரவிகுமார், ஒன்றியக் குழுதலைவர் அசோக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் வேலு, துணைப் பதிவாளர் (பால்வளம்) வேலூர் விஸ்வேஸ்வரன். துணை பொதுமேளாளர் (பொறுப்பு) கோதண்டராமன், உதவி பொது மேலாளர் ரங்கசாமி, உதவி பொது மேலாளர் பானுமதி, விரிவாக்க அலுவலர் ஆனந்தன், சங்க செயலாளர் வினாயாகமூர்த்தி , பரதராமி சங்க தலைவர் சிவசங்கரன், கிளைச்சங்க செயலாளர்கள், பரதராமி பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி தயாளன், மேலதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா பிரகாஷ், ஏ,ஜி.எம்.கோதண்டராமன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×