என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊழியர்களுக்கு தொற்று- குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது
Byமாலை மலர்20 Jan 2022 9:14 AM GMT (Updated: 20 Jan 2022 9:14 AM GMT)
பூங்கா ஊழியர்கள் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருவார்கள்.
தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பணிபுரியக் கூடிய 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மேலும் தொற்று உறுதியான ஊழியர்களுடன் வேலை பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு தொற்று உறுதி காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X