என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்19 Jan 2022 11:11 AM GMT (Updated: 19 Jan 2022 11:11 AM GMT)
பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிட்டு இருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த பன்னீர் கரும்புகளை அறுவடை செய்து 4 லாரிகளில் சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றார்.
ஊரடங்கு மற்றும் பல்வேறு காரணங்களால் கரும்பு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை. இதனால் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மனவருத்தத்தில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் பயிருக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதனால் மயக்கமடைந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டுவந்தனர். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிட்டு இருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த பன்னீர் கரும்புகளை அறுவடை செய்து 4 லாரிகளில் சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றார்.
ஊரடங்கு மற்றும் பல்வேறு காரணங்களால் கரும்பு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை. இதனால் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மனவருத்தத்தில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் பயிருக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதனால் மயக்கமடைந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டுவந்தனர். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சமேதா ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X