என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமயம் அருகே ஜல்லிகட்டு போட்டி
Byமாலை மலர்19 Jan 2022 10:11 AM GMT (Updated: 19 Jan 2022 10:11 AM GMT)
திருமயம் அருகே மலையகோவிலில் தைபூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஏராளமான காளைகள், காளையர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குலமங்கலத்தில் உள்ள மலையக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைபூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபானி, திருமயம் தாசில்தார் பிரவினாமேரி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதலில் கோவில் மாடு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
வெற்றி காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதில் 500 காளைகள் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு வாடிசால் அருகே இருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X