என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
குமரன் கோவிலில் தைபூசத் திருவிழா
குமரன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தீர்த்தவாரி
By
மாலை மலர்19 Jan 2022 9:43 AM GMT (Updated: 19 Jan 2022 9:43 AM GMT)

செம்பனார்கோவில் குமரன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மயில் வாகனத்தில் சண்முக சுப்பிரமணிய சாமி வீதியுலா நடந்தது.கடந்த 16ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தங்க கவசம் மற்றும் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக சிறப்பு யாகம், சண்முகா அர்ச்சனை நடந்தது. விழாவையொட்டி சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சாமி, அம்பாள் புறப்பாடாகி, வள்ளி தெய்வானையுடன் சண்முக சுப்பிரமணியசாமி, இடும்பர் ஆகிய சாமிகளின் வீதியுலா நடந்தது.
பின்னர் காவிரி ஆற்றங்கரையில் பஞ்ச மூர்த்திகளையும் எழுந்தருளச்
செய்து தீர்த்தவாரி நடந்தது. அப்போது புனித நீராடினர்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை குமரன் கோவில் பகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர்
குணசேகரன் ஆகியோர் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
