என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் கலந்துகொண்ட பாய்மர படகுகளை படத்தில் காணலாம்.
தைப்பூசத்தையொட்டி பாய்மர படகு போட்டி
அறந்தாங்கி அருகே மீனவ கிராமத்தில் தைப்பூச விழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி தாலுகா வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பாய்மரப்படகு போட்டி நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற படகு போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 27 பாய் மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன.
ஒரு படகிற்கு 6 வீரர்கள் வீதம் 162 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஒரு படகிற்கு ஒரு சொருகு பலகை, ஒரு கடல் பலகை, ஒரு பாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருந்தது.
மேலும் பந்தைய தூரத்திற்கு சென்று வர 12 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது.
போட்டி தூரத்தை கடக்க வீரர்கள் முந்திக்கொண்டு செயல்பட்டது காண்போருக்கு மிகவும் உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
படகு போட்டியை ஏராளமான ரசிகர்கள் , பொதுமக்கள் கடற்கரையோரம் திரண்டனர்.
Next Story






