search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பெரம்பலூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா

    பெரம்பலூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    பெரம்பலூர்: 

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 86 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 47 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.

    தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 546 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 381 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பெரம்பலூர் மாவட்டத்தில் 346 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,230 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×