என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணவன் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2022 8:34 AM GMT (Updated: 18 Jan 2022 8:34 AM GMT)
ஆலங்குடி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த திருவரங்குளம் அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35).
இவரது மனைவி கவுதமி (24). இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அறிவழகன் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். இதனால் கவுதமி நிர்கதியாய் நின்றார்.
கணவன் இறந்த நிலையில், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கூறியவாறு அக்கம்பக்கத்தினர் புலம்பியுள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த கவுதமி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வல்லதிராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X