என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு நடைபெற்றபோது எடுத்தபடம்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு

    அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு மன்னகுடியில் நடைபெற்றது.

    மாநாட்டுக்கு அரோக்கியசாமி தலைமை தாங்கினார். துரைராஜ், கொடியேற்றி வைத்தார்.

    மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பி னர் தண்டாயுதபாணி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் மன்னகுடி ஊராட்சியில் மன்னகுடி கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும்.

    மன்னகுடி கிழக்கு குடியிருப்பு சிஎம்பி பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே அந்த பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டித்தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    சுப்பிரமணியபுரம், மன்னகுடி, பிடாரிகாடு, நாட்டுமங்களம் வழியாக அறந்தாங்கி செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
    மன்னகுடி, நாகுடி வரை செல்லும் சிஎம்பி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக தமிழக அரசு செப்பனிட்டு தரவேண்டும்.

    மன்னகுடி ஊராட்சியில் மன்னகுடி ஏடி காலனி 1996 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்பு தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய உரிய நிதி ஒதுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    மன்னகுடி நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×