search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் பெண் தற்கொலை

    அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை பேரூர் தீத்திப்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி மாலினி (வயது 45). இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஹரிகிருஷ்ணன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் களது மகள் பிரியதர்ஷினி, தனது தாய் மாலினிக்கு போன் செய்தார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை, மீண்டும் போன் செய்தும்  அவர் எடுக்காததால் தனது தந்தை       ஹரிகிருஷ்ண னுக்கு போன் செய்து மாலினி யின் வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறினார்.

    ஹரிகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது அவரது வீட்டின்   கதவு உள்பக்கம் பூட்டி இருந்தது. வெகு நேரம் கதவை தட்டியும் அவர் திறக்காததால் அக்கம் பக்கத் தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு அறையில் மாலினி மயங்கிய நிலையில்  கிடந்தார். இதைகண்டு  அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது  மாலினி மயக்கம் தெளிந்ததும் தான்  தூங்குவதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறினார். பின்னர் மீண்டும் மயங்கினார். 

    இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து பேரூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (23). எலக்ட்ரீசியன். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று செல்வராஜ் தொடர்ந்து மதுகுடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தாயார் பட்டுக்கனி மற்றும் அவரது மகள் இனி குடிக்க கூடாது என கண்டித்து அறிவுரை கூறினர்.

    இதனால் மனவேதனை அடைந்த செல்வராஜ் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்தார். பின்னர் தாயாரிடம் தான் சாணி பவுடரை குடித்துவிட்டதாக கூறி மயங்கினார்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பட்டுக்கனி அவரை மீட்டு சூலூர்  அரசு ஆஸ்பத் திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தார். 

    அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே  இறந்து விட்டதாக தெரிவித் தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×