search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உ.பி. வாலிபர் அபிஷேக்சுக்லா.
    X
    உ.பி. வாலிபர் அபிஷேக்சுக்லா.

    நாகை துறைமுகத்தில் கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்த உ.பி. வாலிபர் கைது

    நாகை துறைமுகத்தில் கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்த உ.பி. வாலிபர் கைது. தீவிரவாதியா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 
    விடுதலைப்புலிகள் ஊடுருவல், தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகம் அமைக்கப்பட்டது. 

    இங்கு 100&க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வரும் நிலையில் துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர் 
    கடற்படை முகாமில் நுழைந்தார்.

    அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் தீவிரவாதியாக இருக்கும் என்ற 
    சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணையில் 
    ஈடுபட்டனர்.

    அப்போது அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது 
    6 வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்தது. இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்த கடற்படை வீரர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

    முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 
    சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி 
    வந்ததாகவும் மாற்றி மாற்றி அவர்களிடம் தகவல் 
    தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதால் 
    இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் அதிகாரிகளுக்கு கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

    இதனையடுத்து திருச்சியிலிருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கடந்த 8 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு பின் பிடிபட்ட அபிஷேக்சுக்லா பற்றிய முழு விவரம் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×