என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு
மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு செய்தனர்.
தரங்கம்பாடி:
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக
அரசு கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5
மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில்
முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள்
வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 2 டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட
காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 350-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுக்கா பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 6 நிரந்தர சோதனை சாவடிகள்,
30 தற்காலிக சோதனைசாவடிகள், அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது 360 வழக்குகள்
போடப்பட்டுள்ளது.
இசெல்லான் முறையில் ரூ.500 அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகரில் பழைய பேருந்து நிலையம், கால்டாக்ஸ், கூறைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர
கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Next Story