என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராணுவ விமானத்தால் பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்17 Jan 2022 9:26 AM GMT (Updated: 17 Jan 2022 9:26 AM GMT)
அதிக சத்தத்துடன் சுற்றி வந்த ராணுவ விமானத்தில் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
திருச்சி:
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து ராணுவ பயிற்சி விமானங்கள் புறப்பட்டு ராமேஸ்வரம் வரை சென்று வருவது வழக்கம். இவ்வாறு வரும் போது அதிக ஒலி எழுப்புவது வாடிக்கை.
அந்த வகையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ராணுவ விமானம் திருச்சி மாநகரை கடந்து சென்றது. இந்த விமானங்கள் கே.கே.நகர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சென்ற போது அதிக சத்தத்துடன் சென்றது. இதனால் அச்சமடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியில் வந்து பார்த்தபோது ராணுவ விமானங்கள் கடந்து சென்றது தெரியவந்தது.
இதனால் ஏதேனும் முக்கிய சம்பவம் நடைபெற உள்ளதா என்ற அச்சத்தில் பொது மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பின்பு அந்த ராணுவ விமானம் பயிற்சி விமானம் என தெரியவந்தபோது நிம்மதி அடைந்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X