என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவிக்கும் மக்கள்
Byமாலை மலர்17 Jan 2022 9:24 AM GMT (Updated: 17 Jan 2022 9:24 AM GMT)
கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்டது வடக்கு மயிலோடை கிராமம். இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக பல ஆண்டுகளாக ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இடம் இருந்தது.
தற்போது இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிலர் தங்களது இடம் என்று கூறி அதில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சடலங்களை எடுத்துச்செல்ல வழிப்பாதை இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பலவேசம்(வயது 60) என்ற பெண் இறந்துவிட்டார். உடனே அவரது உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள் வேலி அமைத்திருந்த விளைநிலம் வழியாகசெல்ல முயன்றனர். இதில் தகராறு ஏற்பட்டது.
உடனே பஞ்சாயத்து தலைவர் வள்ளி செந்தில் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக விளைநிலம் வழியாக உடலை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
தங்களுக்கு சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என்று அந்த காலனி மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்டது வடக்கு மயிலோடை கிராமம். இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக பல ஆண்டுகளாக ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இடம் இருந்தது.
தற்போது இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிலர் தங்களது இடம் என்று கூறி அதில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சடலங்களை எடுத்துச்செல்ல வழிப்பாதை இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பலவேசம்(வயது 60) என்ற பெண் இறந்துவிட்டார். உடனே அவரது உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள் வேலி அமைத்திருந்த விளைநிலம் வழியாகசெல்ல முயன்றனர். இதில் தகராறு ஏற்பட்டது.
உடனே பஞ்சாயத்து தலைவர் வள்ளி செந்தில் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக விளைநிலம் வழியாக உடலை எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
தங்களுக்கு சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என்று அந்த காலனி மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X