என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேர் கைது
Byமாலை மலர்17 Jan 2022 9:09 AM GMT (Updated: 17 Jan 2022 9:09 AM GMT)
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் பூத்துகள், பெட்ரோல் பங்க்குகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் பல இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
பின்னர் கண்டோன்மென்ட், காந்திமார்கெட், கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட காவல்நிலைய எல்லைகளில் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வசமிருந்த 254 மதுபான பாட்டில்களும், ரூ. 380 ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X