என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்த காட்சி.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஏ.கே. கருணாநிதி, அன்பழக உடையார், ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம், கணேசன், குமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆ.ர் பிறந்தநாள் விழா மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள மேற்கு மாநில அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் மேற்கு மாநில தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மேற்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் பேராசிரியர் ராமதாஸ், காசிநாதன், மாநில துணை தலைவர்கள் நந்தன், ஓவியா ஆனந்தன், மாநில இணை செயலாளர் மகாதேவி, மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கோவிந்தம்மாள், சதாசிவம், கணேசன், மாநில பொருளாளர் சங்கர் உடையார், மாநில அணி செயலா ளர்கள் சிவாலயா இளங்கோ சுத்துக்கேணி பாஸ்கர், வெரோனிக்கா, வக்கீல் குணசேகரன்,, விக்னேஷ் காசிநாதன், லட்சுமணன், புகழ்பாரி,முருகன்,கணேசன், மாநில அணி தலை வர்கள் லியோ ராஜசேகர், ராதாகிருஷ்ணன் உடையார், மாசிலா குப்புசாமி, முருகதாஸ் மற்றும் தொகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுவை முத்தியால் பேட்டை அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழ.ழா கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி. மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரிமணிகண்டன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், கண்ணன், மண்ணாங்கட்டி, ஹரிகிருஷ்ணா, முனி யாண்டி, வாசு, தனஞ்செயன், பிரபா, கஜேந்திரன், குமார், ராமலிங்கம், சிவா, நடராஜ், முத்து, ராதா, தனலட்சுமி, ஜமுனா மற்றும் ஊர் பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மனித நேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
புதிய நீதி கட்சி சார் பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story